புதுவை காவல் துறையின் போக்கை கண்டித்து பேரணி, ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
புதுவை : உண்ணாவிரதம் மேற்கொண்ட தலைவர்களை கைது செய்த புதுவை காவல்துறையைக் கண்டித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற்று இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையை துவக்கக் கோரி சி.பி.எம். உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தன. இந்த நிலையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இதனால், சிபிஎம் பிரதேச செயலாளர் வெ. பெருமாள், மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், போராட்டத்திற்கும் தடை விதித்தனர்.
காவல் துறையின் இந்த செயலைக் கண்டித்தும், மருத்துவக் கல்லூரிக்கு உடனே அங்கீகாரம் வழங்கக் கோரியும் இந்தப் போரட்டம் நடைபெற்றது.
ராஜீவ்காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாகச் சென்று மருத்துவக் கல்லூரி எதிரே ஆர்ப்பாட்டம் செய்தனர்.












Click it and Unblock the Notifications