காவல்நிலையத்தை தாக்கிய வழக்கு-9 வக்கீல்கள் விடுதலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் காவல் நிலையம் மீது நடந்த தாக்குதல் வழக்கிலிருந்து 9 வக்கீல்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் 2006ம் ஆண்டு பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக இருந்த விஜய அனிதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வக்கீல் பிரபு என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் நள்ளிரவு பிரபு வீட்டிற்கு சென்று அவரை கைது செய்ய முயன்றனர்.
இந்நிலையில் 2.3.2006 அன்று இரவு வக்கீல்கள் சிலர் தென்பாகம் காவல்நிலையம் மீது கல்வீசி தாக்கி கண்ணாடியை உடைத்ததாக ஏட்டு சுப்பையா புகார் அளித்தார்.
அதன்பேரில் வக்கீல்கள் அரிராகவன், மந்திரமூர்த்தி, மார்க்ஸ், விக்டர் அண்டோ, இக்னோஷியஸ், பிரபு, முத்துராமலிங்கம், சுப்பு, பால்ஜோசப், பர்ணபாஸ் ஆகிய 9 பேர் மீது தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்ய முயன்றனர்.
அப்போது போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி ஜிடிசியல் மாஜி்ஸ்திரேட் எண் 1 கோர்ட்டில் நடந்தது. இதனை விசாரித்த மாஜிஸ்திரேட் மாயகிருஷ்ணன் குற்றம்சாட்டப்பட்ட 9 வக்கீல்களையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications