தொழிலாளர்களை நாய் போல குரைக்கச் சொன்ன நிர்வாகி!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: நிறுவன கூட்டத்தில் நாய் போலகுறைக்குமாறு தொழிலாளர்களை வற்புறுத்தியதாக வெளிநாட்டு நிறுவனத்தின் மீது சீனத் தொழிலாளர்கள் புகார் கொடுத்துள்ளனர். இதனால் சீனாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மேலும் சிக்கல் வலுத்துள்ளது.

சீனாவில் உள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் சீனத் தொழிலாளர்கள் அடிக்கடி ஊதிய உயர்வு கோரி ஸ்டிரைக் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் மீது வினோதமான புகாரைக் கூறியுள்ளனர் சீனத் தொழிலாளர்கள்.

சென்ஷென் நகரில் உள்ள குளோரைட் பீனிக்ஸ்டெக் எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தில் பணியாற்ஏறி வரும் 26 தொழிலாளர்கள் அங்குள்ள தொழிலாளர் குறை தீர்ப்பு மையத்தை அணுகி புகார் கொடுத்துள்ளனர்.

அதில், எங்களை நாங்கள் பணியாற்றி வந்த நிறுவனம் பல விதங்களில் அவமானப்படுத்தி வந்தது. எங்கள் ஊழியர்கள் ஏழு பேரை டிஸ்மிஸ் செய்துள்ளது. அவர்கள் சொன்னது போல நடக்காததால் இந்த நடவடிக்கை.

நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் ஷாங் ஹோங்யி என்பவர், மாதாந்திர கூட்டத்தின்போது தனக்கு சாதகமாக செயல்படாத ஊழியர்களை அழைத்து மற்றவர்கள் முன்பு நாய் போல குரைக்குமாறு கட்டாயப்படுத்தி அவமானப்படுத்துவார் என்று கூறியுள்ளனர்.

இந்தப் புகாரால் சீனாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் புகார் குறித்து ஷாங் விளக்குகையில், நான் அப்படியெல்லாம் கூறினேனா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை சொல்லியிருந்தால் அது நகைச்சுவைக்காக மட்டுமேதான் என்று கூறியுள்ளார் ஷாங்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+