For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி காயமடைந்த கிராம நிர்வாக அலுவலர் பலி

Google Oneindia Tamil News

விருதுநகர்: விருதுநகர் மாவ்டடம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் சோதனை நடத்தச் சென்றபோது வெடிவிபத்து ஏற்பட்டு காயமடைந்த 8 அதிகாரிகளில் ஒரு கிராம நிர்வாக அலுவலர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

சாத்தூர் அருகே வி.துரைசாமி புரம் பகுதியில் ஒரு சட்டவிரோதமான பட்டாசு ஆலை இயங்கி வருவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு அதிகாரிகள் குழு சோதனைக்குச் சென்றது.அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் எட்டு அதிகாரிகளும் சிக்கி படுகாயமடைந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் எட்டு பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், சாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் குமாரசாமி என்பவர் நேற்று இரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்ஸ்பெக்டர் உள்பட மற்ற 7 பேரும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X