ரூ. 80 கோடி மோசடி செய்த தம்பதியை பிடிக்க கேரளாவில் தமிழக போலீஸ் வேட்டை

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ரூ. 80 கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு தப்பிய தம்பதியைப் பிடிக்க சேலம் போலீஸார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.

சேலம் பழனியப்பா நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி வண்டார்குழலி. இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் கம்யூட்டர் நிறுவனம் தொடங்கினர். அந்த நிறுவனம் மூலம் டேட்டா என்ட்ரி பிராசசிங் என்ற பெயரி்ல் ஏராளமானோரிடம் பணமோசடி நடத்தினர்.

சேலம், ஈரோடு, நாமக்கல் உள்பட தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கனக்கானோர் பிரபாகரன் தம்பதியிடம் பணம் கொடுத்து ஏமாந்தனர். ரூ.80 கோடி வரை மோசடி செய்த இந்த தம்பதியினரை போலீசார் கைது செய்தனர். அதன்பின்பு ஜாமீனில் வந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

இந்நிலையில் பிரபாகரன், வண்டார்குழலி தம்பதி கேரளாவில் பல இடங்களில் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் அவர்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து தனி்ப்படை போலீசார் அங்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இதேபோல் கேரளாவில் பல இடங்களில் அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+