போதையில் பணியில் இருந்த ஏட்டு சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: குடிபோதையில் பணியில் இருந்த தலைமைக் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தென்காசியை சேர்ந்தவர் அரிராமகிருஷ்ணன். இவர் சாம்பவர் வடகரை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வாரமாக இவர் குற்றால சீசனை ஓட்டி அருவி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று பழைய குற்றாலத்தில் பாதுகாப்பில் இருந்தபோது அங்கு வந்த பயணிகளிடம் குடிபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அங்கு நின்றவர்கள் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க்கிற்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர் இதுபற்றி விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு தென்காசி டிஎஸ்பி ஸ்டாலின், குற்றாலம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவன் ஆகியோர் ஏட்டு அரிராமகிருஷ்ணன் மற்றும் அவருடன் பணியாற்றிய போலீசாரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஏட்டு அரிராமகிருஷ்ணன் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஏட்டு அரிராமகிருஷ்ணனை எஸ்பி அஸ்ரா கர்க் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+