For Quick Alerts
For Daily Alerts
Just In
தூத்துக்குடி மீனவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோல் கிளாத்தி
தூத்துக்குடி: தூத்துக்குடி கடல் பகுதியில் வழக்கமாக பிடிபடும் மீன் வகைகளுள் தோல் கிளாத்தியும் ஒன்று. பதனிட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன.
இதனால் இந்த வகை மீன்களுக்கு அதிகம் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது தூத்துக்குடியில் இருந்து கிழக்கே 20 முதல் 35 கடல் மைல் தொலைவில் உள்ள பகுதிகளில் தோல் கிளாத்தி மீன்கள் கிடைக்கின்றன.
நேற்றிரவு மட்டும் சுமார் 28 முதல் 30 டன் வரை தோல் கிளாத்தி மீன்கள பிடிக்கப்பட்டன. இவை மீன்பிடி துறைமுகத்தில் கிலோ ரூ.75 முதல் ரூ.85 வரை விலைபோனது.
சமீபகாலமாக இந்த வகை மீன்கள் அதிகம் கிடைத்து வருவதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Comments
Story first published: Thursday, August 12, 2010, 13:56 [IST]