3 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று கேரளா வருகை
திருவனந்தபுரம்: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று கேரளா வருகிறார். அவர் கோட்டயம், திருவனந்தபுரம் மற்றும் ஆலப்புழா ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இன்று காலை 10 மணி அளவில் கொச்சிக்கு விமானம் மூலம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோட்டயம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் குமரகம் செல்கிறார். தொடர்ந்து மாலையில் பரணங்கானத்தி்ல் புனித அல்போன்சம்மாள் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். இரவு குமரகத்தில் தங்கும் அவர் நாளை திருவனந்தபுரத்தில் சாந்திகிரி ஆசிரமத்தில் நடைபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பின்னர் மீண்டும் அவர் குமரகம் திரும்புகிறார். வரும் 14-ம் தேதி காலை ஆலப்புழா குன்னம்மடகாயலில் நடைபெறும் நேரு கோப்பைக்கான படகு போட்டியை தொடங்கி வைக்கும் அவர் அன்று மாலை கொச்சியி்ல் இருந்து டெல்லி செல்கிறார்.