Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோண்ட தோண்ட ஊழல்... கல்மாடியை விசாரிக்க அமலாக்கப் பிரிவு முடிவு!

Subscribe to Oneindia Tamil

Kalmadi
டெல்லி: காமன்வெல்த் போட்டிகள் மட்டுமின்றி, தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளுக்கான விளையாட்டுக் கருவிகள் வாங்கியதிலும் பெரும் ஊழல் நடந்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதைத்தொடர்ந்து சுரேஷ் கல்மாடியிடம் விசாரணை நடத்த மத்திய அமலாக்கப் பிரிவு முடிவு செய்துள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு நடந்து வரும் ஏற்பாடுகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய தணிக்கைத் துறை செய்த ஆய்வில் எந்தெந்த வழிகளில் எல்லாம் ஊழல் நடந்துள்ளது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த ஊழலில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சுரேஷ் கல்மாடிக்கு நேரடித் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவரை உடனடியாக போட்டிக் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது.

ஆனால் கல்மாடி காங்கிரஸ்காரர் என்பதால் மத்திய அரசு இந்த ஊழலைக் கண்டு கொள்ளாமல் மவுனம் சாதிக்கிறது. போட்டி ஏற்பாடுகளில் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஊழல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகும், இதில் பிரதமர் மன்மோகன்சிங் நடவடிக்கை எடுக்காததால், போட்டியில் பங்கேற்க உள்ள 70 நாடுகளும், தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து வருகின்றன.

இந்த நிலையில் காமன்வெல்த் போட்டி ஊழலை ஆதாரத்துடன் வெளிப்படுத்தும் முயற்சிகளில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக அவர்கள் போட்டி ஏற்பாடு குழுக்களில் இருந்த தர்பாரி, சஞ்சய் மொகிந்தி ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.

அடுத்து இந்த ஊழலுக்கு நிதி பரிமாற்றம் நடந்த வங்கிகளில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது. அதன்படி லண்டனில் உள்ள ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்துக்கு அமலாக்க பிரிவினர் நோட்டீசு அனுப்பியுள்ளனர். அதில் காமன்வெல்த் போட்டி அமைப்பாளர்களின் நிதி பரிமாற்ற விபரங்கள் கோரப்பட்டுள்ளன.

லண்டனில் உள்ள பாஸ்ட் டிராக் நிறுவனத்துக்கு காமன்வெல்த் அமைப்பும், போட்டி ஒருங்கிணைப்புக்குழுவும் சாதகமாக நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை ரூ. 208 கோடி ஒப்பந்தப்படி பி.பி.சி. டி.வி.க்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 15 சதவீதம் கமிஷனாக கைமாறியுள்ளது. இந்த கமிஷன் பணம் யார், யாருக்கு கொடுக்கப்பட்டது என்று விசாரணை நடந்து வருகிறது. இது சுரேஷ் கல்மாடிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

கல்மாடியிடமும் விசாரிக்க முடிவு...

சுரேஷ் கல்மாடியிடம் விசாரித்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கருதுகிறார்கள். ஆனால் அவரிடம் உடனடியாக விசாரணை நடைபெறுமா என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது.

அக்டோபர் 12-ந்தேதி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முடிகின்றன. அதன் பிறகு கல்மாடி உடனடியாக விசாரிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு கருவி வாங்கியதிலும்...

இதற்கிடையே ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள தேசிய விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளிலும் சுரேஷ் கல்மாடி ஊழல் செய்திருப்பதாக மற்றொரு புகார் பரபரப்பாக எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை தேசிய விளையாட்டுப் போட்டி அமைப்புக் குழுத் தலைவர் ஆர்.கே.ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

போட்டியை காண்பிக்கும் வீடியோ ஸ்கிரீன்களை குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடம்தான் வாங்க வேண்டும் என்று சுரேஷ் கல்மாடி உத்தரவிட்டார். இந்த வீடியோ ஸ்கிரீன்கள் சராசரி கடைகளில் விற்கப்படும் விலையைவிட 4 மடங்கு அதிகம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாம்.

இதே போல்தான் மற்ற பொருட்கள் வாங்குவதிலும் ஊழல் நடப்பதாக கூறப்பட்டுள்ளது. தேசிய போட்டி அமைப்புக் குழு தலைவரே குற்றச்சாட்டுக்களை கூறி இருப்பதால் சுரேஷ் கல்மாடி பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+