சிறை காவலர்களை கண்டித்து பாளை சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: பாளை சிறையில் கைதியை காவலர்கள் தாக்கினர். இதனால் கைதிகள் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருந்தனர்.

நெல்லை தச்சநல்லூர் மேக்கரையை சேர்ந்தவர் குமுளி என்ற ராஜ்குமார். இவர் மீது மதுரையி்ல் கொலை மற்றும் வெடிகுண்டு வைத்த வழக்கு, தச்சநல்லூரில் சில வழிப்பறி வழக்குகளும் உள்ளன. பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை நேற்று முன்தினம் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர். திரும்பி வரும்போது ராஜ்குமார் படிப்பதற்காக கடையில் வார பத்திரிக்கை வாங்கினார். அதனை சிறைக்குள் கொண்டு செல்ல பாளை சிறை காவலர்கள் அனுமதிக்க மறுத்தனர்.

இதையடுத்து ராஜ்குமாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜ்குமார் சிறை வார்டனை தி்ட்டினார். இதையடுத்து சிறை காவலர்கள் அவரது அறைக்கு சென்று ராஜ்குமாரை தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை ராஜ்குமார் மற்றும் 2வது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த அவரது ஆதரவாளர்கள் 50 பேர் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருந்தனர்.

இதையடுத்து சிறை கண்காணிப்பாளர் ஜெயராமன் (பொறுப்பு) கைதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்கள் சாப்பிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+