சட்டமன்ற தேர்தல்: மாஜி கமிஷனர்கள் உருவாக்கும் புது அமைப்பு-நாளை சென்னையில் துவக்கம்

'தேர்தல் நேர்மைக்கான அரங்கம்' (Forum for Electoral Integrity) என்ற பெயரிலான இந்த அமைப்பு சுதந்திர தினமான நாளைய தினம் தொடங்கப்படுகிறது.
இந்த அமைப்பில் சென்னையில் செட்டிகிவிட்ட முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்களான டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.கோபாலசாமி, தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயம், சி.பி.ஐ முன்னாள் இயக்குனர் ஆர்.கே.ராகவன், மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் பி.எஸ்.ராகவன், கப்பல் போக்குவரத்து துறை முன்னாள் கூடுதல் செயலாளர் எஸ்.பி.அம்புரோஸ், மூத்த ஆடிட்டர் ஜி.நாராயணசாமி, வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பணம் கொடுத்து ஓட்டு கேட்பதைத் தடுக்கவும், அது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,
அப்பட்டமாக அத்துமீறல்கள் நடக்கும் போது என்னென்ன நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையத்துக்கும் இந்த அமைப்பு ஆலோசனைகளை வழங்குமாம்.
நாடு முழுவதும் உள்பட மற்ற தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து தேர்தல் முறையில் சீர்திருத்தங்களை கொண்டு வரும் குறித்து மத்திய அரசை வலியுறுத்தவும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாம்.
அடுத்தாண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில் இந்த அமைப்பு மேற்கொள்ளும் கண்காணிப்பும் சொல்லும் பரிந்துரைகளும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications