ஏடிஎம் மையத்தில் மார்பைக் காட்டி பணத்தைத் திருடிய 2 பெண்கள்

Subscribe to Oneindia Tamil

Girl
பாரீஸ்: பாரீஸ் நகரில் ஒரு ஏடிஎம் மையத்திற்கு வந்த இரண்டு அழகான பெண்கள் அங்கு பணத்தை எடுத்துக் கொண்டிருந்தவரிடம் தங்களது மார்புகளை காட்டி, கவர்ச்சியால் மயக்கி அந்த நபரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அந்த இரு பெண்களுக்கும் 20 வயது இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். ஒரு ஏடிஎம் மையத்திற்கு இருவரும் சென்றனர். அப்போது அங்கு ஒரு நபர் பணத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அவரை நெருங்கிய இருவரும் மிக நெருக்கத்தில் போய் நின்று கொண்டு தங்களது மார்புகளை திறந்து காட்டியுள்ளனர்.

படு நெருக்கத்தில் இரு பெண்களை கவர்ச்சிகரமாக பார்த்ததில் அந்த நபர் வெலவெலத்து போய் தன்னிலை மறந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்ட இரு பெண்களில் ஒருவர், நைசாக, அந்த நபரின் கார்டை பயன்படுத்தி 300 யூரோ பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி விட்டார். மற்ற பெண்ணும் அந்த நபரை ஏமாற்றி வெளியேறினார்.

இந்த சம்பவம் பாரீஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு நூதன திருட்டு இதுவரை அங்கு நடந்ததில்லையாம். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இருப்பினும் இரு பெண்களின் முகமும் தெளிவாக பதிவாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+