Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்.பிக்களுக்கான சம்பள உயர்வு-முடிவை தள்ளி வைத்தது அமைச்சரவை

Subscribe to Oneindia Tamil

Parliament
டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு தொடர்பான முடிவை மத்திய அமைச்சரவை தள்ளி வைத்துள்ளது.

இன்று காலை கூடிய மத்திய அமைச்சரவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள திருத்த மசோதா குறித்து விரிவாக விவாதித்தது.

அதேபோல பயோடெக் முறைப்படுத்துதல் ஆணையம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர் சம்பள உயர்வு குறித்து எந்த முடிவையும் எடுக்காமல் அமைச்சரவைக் கூட்டம் முடிந்தது.

புதிய சம்பள விகிதப்படி எம்.பிக்களுக்கு தற்போது உள்ள ரூ. 15,000 என்பதை ரூ. 50,000 ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான டிஏவை ரூ. 1000 என்பதிலிருந்து 2000 ஆக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எம்.பிக்களின் சம்பள விகிதம் தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு அவர்களுக்கு அதிக அளவில் சம்பளம் தர வேண்டும் என பரிந்துரைத்தது. மேலும், மாதத்திற்கு ரூ. 80,000 வரை சம்பளம் தரலாம் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+