மின்சாரமே இல்லாத நிலையில் இலவச பம்புசெட் எப்படி சாத்தியம்-நல்லகண்ணு கேள்வி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: மின்பற்றாக்குறை தீர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என மின்வாரியத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறும் நிலையில்,

விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளது எப்படி சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியதாவது,

எல்லையை தாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களை காக்க முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளது கண்டனத்திற்குரியது.

தமிழக மீனவர்கள் ஒன்றும் எல்லை தாண்டுவதில்லை. மாறாக சிங்கள கடற்படையினர் தான் நாகை, கோடியக்கரை உள்ளிட்ட நமது கடல் பகுதிக்குள் வந்து நமது மீனவர்களையே தாக்கிச் செல்லும் செயல் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மின்பற்றாக்குறை தீர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என மின்வாரியத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது எப்படி சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+