கொளத்தூர் மணி கைதுக்கு தமுமுக கண்டனம்: விடுவிக்க கோரிக்கை
மதுரை: திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உட்பட 59 பேர் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் காஷ்மீர் மக்கள் மீது நடத்தி வரும் அடக்குமுறையை கண்டித்து உள்நாட்டு அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையிடம் கூட்டமைப்பினர் முறையாக அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டது.
இதனால் தான் அனுமதியை மீறி பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி தலைமயில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 8 பெண்கள் உட்பட 59 பேரையும் தமிழக அரசு கைது செய்து வேலூர் மற்றும் புழல் சிறைகளில் அடைத்துள்ளது. இந்த செயல் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யுமாறு தமுமுக வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications