இந்திய தொழிலதிபர்களுக்காக தயாராகும் 157 விமானங்கள்!

இந்தியாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வர தொழிலதிபர்கள் 157 ஜெட் விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளனராம். எல்லாம் பெரும் பெரும் பட்ஜெட்டிலான அதி நவீன விமானங்கள்.
முக்கிய கூட்டங்கள், வர்த்தக பேரங்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் என வெளிநாடுகளுக்கு தினசரி பறக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் நமது நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள். இதற்கெல்லாம் ஹெலிகாப்டர் சரிப்படாது, அதெல்லாம் சைக்கிள் மாதிரி ஆகி விட்டது நமது தொழிலிதபர்களுக்கு. இதனால் அதி நவீன ஜெட் விமானங்களை வாங்கிப் போட்டு விமான நிலையங்களில் பார்க் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இப்படியாக கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் மதிப்பிலான 157 ஜெட் விமானங்களுக்கு இந்தியத் தொழிலதிபர்கள் ஆர்டர் கொடுத்துள்ளனராம். அடுத்த ஆண்டுக்குள் இவை டெலிவரி செய்யப்படவுள்ளதாம். அனைத்துமே அட்டகாசமான, அதி நவீன விமானங்களாம்.
இந்த விமானங்கள் டெலிவரி செய்யப்பட்டு விட்டால், உலகிலேயே அதிக விமானங்களை சொந்தமாக வைத்திருக்கும் தொழிலதிபர்கள் நிறைந்த நாடு வரிசையில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைக்குமாம்.
தனியார் விமானங்கள் (தொழிலதிபர்கள், நிறுவனங்களுக்கு சொந்தமானது) அதிகம் வைத்திருக்கும் நாடுகள் வரிசையில் தற்போது 18வது இடத்தில் உள்ளது இந்தியா. இந்தியாவில் பெரும் பணக்கார நிறுவனங்களுக்குச் சொந்தமாக மட்டும் 111 குட்டி விமானங்கள் உள்ளதாம். இது சீனாவை விட அதிகம் என்கிறார்கல்.
அம்பானி சகோதரர்கள்தான் விமானங்களில் பெருமளவில் பறப்பவர்களாம். எங்கு போனாலும் விமானங்களில்தான் போகிறார்களாம். இரு சகோதரர்களும் தற்போது ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த இரு ஜெட் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனராம். அதேபோல டாடா, ரூயா, டிவிஎஸ், கேபி சிங், கெளதம் தபார், ஜின்டால் குடும்பத்தினர், சைரஸ் பூனாவாலா உள்ளிட்டோரும் புதிய ஜெட் வி்மானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனராம்.
அனைவருமே புத்தம் புதிய விமானங்களை வாங்குகிறார்கள். பழைய விமானங்களை இவர்கள் விரும்பவில்லை. பல்வேறு வசதிகளுடன் கூடியதாக ஜெட் விமானங்கள் இருக்குமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனராம்.
திடீரென அதிக அளவில் நமது தொழிலதிபர்கள் விமானங்கள் வாங்கிக் குவிக்க வேண்டிய அவசியம் என்ன?.
இதுகுறித்து பால்கன் பிசினஸ் ஜெட்களை தயாரிக்கும் டஸ்ஸால்ட் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி போஸ்னியா ராவ் கூறுகையில், இந்திய நிறுவனங்கள் முன்பு போல இல்லை. வெளிநாடுகளிலும் அவை பெரிய அளவில் வியாபித்து வருகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியர்கள் வாங்குவது அதிகரித்து விட்டது. இதனால் வெளிநாடுகளுக்கு அடிக்கடி போக வேண்டியுள்ளது. சொந்த விமானத்தில் போவதையே அவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். இதனால்தான் விமானங்களை வாங்கும் மோகம் அதிகரித்துள்ளது என்கிறார்.
மேலும், ஒரே நேரத்தில் பலரை உடன் அழைத்துச் செல்ல சொந்த விமானம் வைத்திருந்தால்தான் சவுகரியம் என்பதும் கூடுதல் காரணம்.
சென்னைக்குப் பக்கத்தில் ஒரு 40 கிலோமீட்டர் தூரத்திற்குள், அரை கிரவுண்டு இடம், சகாய விலையில் கிடைத்தால் சவுகரியமாக இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் இந்த விமானங்கள் விரைவில் 'டர் புர்'ரென்று டபாய்க்கப் போகிறது, வேடிக்கை பார்க்கலாம், வேறென்ன செய்ய முடியும் நம்மால்....!
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications