பள்ளி மாணவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட பாதிரியார் கைது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட கிறிஸ்தவ பாதிரியார் ஸ்டீபனை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகில் உள்ளது தச்சம்பாடி. இங்கு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக இருப்பவர் ஸ்டீபன் (30).
இவர் தேவாலயத்தைச் சேர்ந்த நடுநிலைப்பள்ளியின் தாளாளராகவும் உள்ளார். இந்த பள்ளியின் அருகே மாணவர்களின் தங்கும் விடுதியும் இருக்கிறது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
விகாபுரத்தைச் சேர்ந்த 7 ம் வகுப்பு படிக்கும் மாணவனை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் பாதிரியார் ஸ்டீபன் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவன் மறுநாள் காலையில் தனது தந்தைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளான். இதனையடுத்து, இந்த பாலியல் வன்முறை குறித்து மாணவனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் மாஜா பாதிரியார் ஸ்டீபனை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications