தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு மீது நம்பிக்கை போய்விட்டது: கொளத்தூர் மணி
வேலூர்: தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு மீது நம்பிக்கை போய் விட்டது என்று பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி கூறினார்.
சென்னை சைதாபேட்டையில் கடந்த 13ம் தேதி காஷ்மீர் மக்கள் பிரச்சனைக்காக அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த கொளத்தூர் மணி உள்பட 46 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையிலும், 8 பெண்கள் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் இன்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வேலூர் சிறை வாயிலில் நிருபர்களிடம பேசிய மணி,
காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக சென்னை சைதாபேட்டையில் ஆர்ப்பாட்டம் செய்ய போலீசார் அனுமதி அளித்தனர்.
பின்னர் திடீரென அனுமதி மறுக்கப்பட்டது.
இதனை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டோம். தமிழக மீனவர்களுக்கு இந்திய அரசு மீது நம்பிக்கை போய்விட்டது. அதனால்தான் இலங்கை மீனவர்களுடன் ராமேஸ்வரத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் கருணாநி இலங்கை தமிழர்களுக்கு நல்லது செய்தால் அதனை வரவேற்போம். சாதிவாரி கணக்கெடுப்பை அரசு உடனே நடத்த வேண்டும். மக்கள் போராட்டத்தினால் தான் இந்த கணக்கெடுப்பு நடைபெறும் என்றால் அதற்கான போராட்டத்தை விரைவில் நடத்துவோம் என்றார்.