செல்போன் வெடித்து ஒருவர் பலி!
கோட்டா: ராஜஸ்தானில் செல்போன் வெடித்துச் சிதறியதில் இளைஞர் உயிரிழந்தார்.
கோட்டா மாவட்டம் பாந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (24). அவர், தனது மாடுகளைத் தேடி காட்டுப் பகுதிக்கு திங்கள்கிழமை சென்றார்.
அப்போது செல்போனில் பேசியவாறு அவர் நடந்துச் சென்றபோது, திடீரென செல்போன் வெடித்துச் சிதறியுள்ளது. நிலைகுலைந்து கீழே விழுந்த அவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.
இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், கிராம மக்கள் வனப் பகுதிக்கு தேடிச் சென்றனர். நீண்டநேர தேடுதலுக்குப் பின்னர் அடர்ந்த வனப் பகுதியில் அவரது சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து அப் பகுதி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு, செல்போன் வெடித்துச் சிதறியதாலேயே மனோஜ் குமார் உயிரிழந்துள்ளார் என்பதை போலீஸாரும் உறுதி செய்துள்ளனர்.
அவரது இடது காது, கழுத்து, தோள் பகுதியில் தீக் காயங்கள் காணப்படுகின்றன. சம்பவ இடத்தில் வெடித்துச் சிதறியது நோக்கியா 1209 மாடல் செல்போன் ஆகும். இதன் பாகங்களையும் போலீசார் சேகரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications