தேர்தல் ஆணையராக ஹரிசங்கர் பிரம்மா நியமனம்

Subscribe to Oneindia Tamil

Harishankar Brahma
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவராக ஹரிசங்கர் பிரம்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நவீ்ன் சாவ்லா ஓய்வு பெற்றதையடுத்து அந்த இடத்தில் இன்னொரு ஆணையராக இருந்த எஸ்.ஒய்.குரேஷி நியமிக்கப்பட்டார்.

இதனால் வி.எஸ்.சம்பத் மட்டுமே மூன்றாவது தேர்தல் ஆணையராக இருந்தார். இன்னொரு ஆணையர் பதவி காலியாக இருந்தது.

இந்தப் பதவிக்கு, மத்திய அரசின் மின்சாரத்துறை செயலாளராக இருந்த ஹரிசங்கர் பிரம்மாவை தேர்வு செய்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

அஸ்ஸாமின் போடாலாந்தைச் சேர்ந்த பிரம்மா ஆந்திர மாநில ஐ.ஏ.எஸ். கேடரைச் சேர்ந்தவர்.

வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த ஒருவர் தேர்தல் ஆணையராக வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிய பிரதமர் இவரை தேர்வு செய்துள்ளார்.

இதன்மூலம் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து இந்தப் பதவியை வகிக்கும் 2வது ஆணையராகிறார் பிரம்மா. ஏற்கனவே ஜே.எம்.லிங்டோ, தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

65 வயாதகும் வரை பிரம்மா இந்தப் பதவியில் நீடிப்பார். இதனால் அவர் தலைமைத் தேர்தல் ஆணையாராக பதவி உயர்வு பெறவும் வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+