வேலூர் அருகே இந்திராகாந்தி சிலை உடைப்பு-காங்கிரசார் சாலை மறியல்!
வேலூர்: வேலூர் அருகே இந்திரா காந்தி சிலையை உடைத்தவர்களை கைது செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் நகரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையில் உள்ள கை பகுதியை மர்ம நபர்கள் சிலர் உடைத்து விட்டனர்.
இதை இன்று காலை காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பார்த்துவிட்டு, நகர தலைவர் சீனிவானிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சீனிவாசன் மற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், தொண்டர்ளுக்கும் தகவல் கொடுத்தார்.
இதனால் அங்கு காங்கிரஸ் கட்சியினர் குவிந்தனர். சில நிமிடங்களில், சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய கோரி, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் இந்திரா காந்தி சிலையை உடைத்தவர்கள் மீது உரிய நவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்பு காங்கிரஸ் நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications