ஆன்லைன் மூலம் மின்சார டெபாசிட் கட்ட ஏற்பாடு
சென்னை: மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்வாரியம் ஏற்படுத்தியுள்ளது.
மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ள இணையதள மின் கட்டண சேவை எளிமையாக உள்ளதால் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் மாதம் முழுவதும் மின் கணக்கீடு, மற்றும் 20-வது நாளுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்த மின்நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் மற்றும் செலுத்தவேண்டிய கடைசி நாள் விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படுகின்றன.
மற்றவர்களுக்கு இந்த விவரங்களை அறியமுடியாத நிலை உள்ளது. இதனை நீக்கும் பொருட்டு, மின்கட்டண வசூல் மையங்களில் உள்ளது போன்ற முன்பணம் செலுத்தும் வசதி தற்பொழுது இணையதள சேவையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று மின்வாரிய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications