தமிழகத்தில் 1 லட்சத்தைத் தாண்டிய 3ஜி இணைப்புகள்!

இத் தகவலை கோவை பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் பி.டி.மாத்யூ தெரிவித்தார். நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்கள், சுற்றுலாத் தலங்கள் உள்பட 38 இடங்களில் 3ஜி சேவை அளிக்கப்படுகிறது. மாநிலத்தில் 3ஜி இணைப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது.
இப்போது 3ஜி சிம் கார்டுகள் இலவசமாக மக்களுக்கு அளிக்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் 3ஜி சேவைக்கு துணைபுரியும் 180 பிடிஎஸ் செல்போன் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 60 பிடிஎஸ் கோபுரங்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம்.
3ஜி இணைப்பின் மூலம் விடியோ கால்ஸ், மொபைல் டிவி, அதிகவேக இன்டர்நெட், விடியோ கான்பரன்ஸ் ஆகிய வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். 3.6 எம்பிபிஎஸ் வேகத்தில் மொபைல் பிராட்பேண்ட் வசதியும் வழங்கப்படுகிறது.
விடியோ சர்வைலன்ஸ் சேவையையும் பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. இதன் மூலம் உலகின் எந்தவொரு பகுதியில் இருந்தும் இன்னொரு இடத்தில் நடப்பதை வீடியோ மூலம் கண்காணிக்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications