இடம் பிடிக்கும் தகராறும்: ஓடும் ரயிலில் இருந்து 2 வயது சிறுமி தாக்கி வீசி கொலை
லக்னெள: இடம் பிடிக்கும் தகராறில் ஓடும் ரயிலில் இருந்து 2 வயது குழந்தையை நான்கு பேர் கும்பல் தூக்கி வீசி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் கிஷோர். இவர் தன் மனைவி புல்குமாரி, 2 வயது மகள் நிஷா ஆகியோருடன் ஜான்சி ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
வழியில், ஒரு இடத்தில் ஏறிய 4 பேர் ராம்கிஷோர் குடும்பத்தினர் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தனர். ராம்கிஷோர் குடும்பத்தினரை வேறு இடத்துக்குப் போகுமாறு மிரட்டினர்.
இதற்கு ராம்கிஷோர் மறுக்கவே அவுருக்கும் 4 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது ராம்கிஷோரையும், புல்குமாரியையும் சரமாரியாக தாக்கிய அந்த 4 பேர் கும்பல், 2 வயது குழந்தை நிஷாவையும் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வெளியே வீசினர்.
இதில் அந்தக் குழந்தை அந்த இடத்திலேயே பலியானாள்.
இதையடுத்து அந்த 4 பேரும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டனர். இவ்வளது நடந்தபோதும் சக பயணிகள் யாரும் இதில் தலையிடவில்லை என்பது தான் கொடூரத்தின் உச்சம்.












Click it and Unblock the Notifications