Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்.பிக்களுக்கான மாதப் படி ரூ. 40,000 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

Parliament
டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் பிடிவாதம் எதிரொலியாக அவர்களுக்கான மாதப் படித் தொகையை ரூ. 40,000 ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

சம்பள உயர்வு கேட்டு மற்றவர்கள் போராடினால் பேச்சுவார்த்தை, சஸ்பென்ஷன், விட்டால் டிஸ்மிஸ் என்று போவார்கள் ஆட்சியாளர்களும், முதலாளி வர்க்கத்தினரும். ஆனால் சம்பள உயர்வை வலியுறுத்தி நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்தனர் நமது மக்கள் பிரதிநிதிகளான எம்.பிக்கள்.

இவர்களின் தொடர் பிடிவாதம் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 300 சதவீத சம்பள உயர்வை 500 சதவீதமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது போதாதென்று இப்போது மாதப் படியையும் அனத்தியே உயர்த்த வைத்து விட்டனர் எம்.பிக்கள்.

அவர்களுக்கான மாதப் படியை ரூ. 10,000 ஆக உயர்த்த பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டது. இது தொகுதிப் படி மற்றும் அலுவலகப் படி ஆகியவை இணைந்ததாகும்.

தற்போது அலுவலகப் படியாக ரூ. 10,000, தொகுதிப் படியாக ரூ. 10,000 பெற்று வருகிறார்கள் எம்.பிக்கள். இதில் தலா ரூ. 10,000 உயர்த்தி இனிமேல் மொத்தமாக ரூ. 40,000 பெறுவார்கள் எம்.பிக்கள்.

அவர்கள் தொகுதிக்கு போனாலும் சரி போகவிட்டாலும் சரி இது கிடைக்கும் என்பதுதான் இங்கு விசேஷமானது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+