செப் 18, 19ம் தேதிகளில் சென்னையில் விநாயகர் ஊர்வலம்: 4 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி

Subscribe to Oneindia Tamil

Vinayakar
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் 11ம் தேதி முதல் சென்னையில் 600 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வார பூஜைகளுக்குப் பின் 18 மற்றும் 19ம் தேதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன.

சிலைகளை நிறுவும் இடங்கள், அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விநாயகர் சதுர்த்தி விழாக் குழுவினருடன் போலீசார் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

சிலைகள் தொடர்பாகவும் அதை கரைப்பது தொடர்பாகவும் சென்னை உயர் நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும் என்று விழா குழுவினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

18ம் தேதி சிவசேனா கட்சியினரும், 19ம் தேதி இந்து முன்னணியினரும் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தவுள்ளனர்.
இதற்கான பாதுகாப்பில் 6,000 போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

10 அடி உயரத்துக்கும் மேல் விநாயகர் சிலைகளை வைக்கக் கூடாது என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர். சீனிவாசபுரம், காசிமேடு, திருவொற்றியூர், நீலாங்கரை ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+