Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5000 இலங்கையருக்கு வேலை தரும் கொரியா!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையைச் சேர்ந்த 5000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவிருப்பதாக தென் கொரியா அறிவித்துள்ளது.

தென் கொரியாவில் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஏற்கெனவே இலங்கையைச் சேர்ந்த 20000-க்கும் அதிகமானோர் இங்கு வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தென் கொரியாவின் மொத்த வேலைவாய்ப்பில் 37 சதவீதத்தை இலங்கையர்களுக்கு வழங்குவதாக அந்நாட்டு அரசு கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. இலங்கை பணியாளர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாகத் திகழ்வதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தென்கொரியா அறிவித்திருந்தது.

இந்த ஆண்டு மட்டும் 29 ஆயிரத்து 732 இலங்கைப் பணியாளர்கள் கொரியாவில் வேலைகேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

இதற்காக கடந்த 3 நாட்களில், இலங்கை முழுவதிலும் பல மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டன.

கடந்த வருடத்தை விட, இவ்வருடம் அதிகமானோர் கொரியாவில் பணியாற்ற விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்கு கொரிய மொழித் தேர்வை வரும் அக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்டுள்ளது.

இந்தத் தேர்விலிருந்து 5000 பேர் தேர்வு செய்யப்பட்டு, கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இந்த ஆண்டு மட்டும் ஏப்ரல் மாதம் வரை கொரியாவில் பணியாற்றுவதற்காக இலங்கையிலிருந்து 3 ஆயிரத்து 500 பேர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+