5000 இலங்கையருக்கு வேலை தரும் கொரியா!
கொழும்பு: இலங்கையைச் சேர்ந்த 5000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவிருப்பதாக தென் கொரியா அறிவித்துள்ளது.
தென் கொரியாவில் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஏற்கெனவே இலங்கையைச் சேர்ந்த 20000-க்கும் அதிகமானோர் இங்கு வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தென் கொரியாவின் மொத்த வேலைவாய்ப்பில் 37 சதவீதத்தை இலங்கையர்களுக்கு வழங்குவதாக அந்நாட்டு அரசு கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. இலங்கை பணியாளர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாகத் திகழ்வதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தென்கொரியா அறிவித்திருந்தது.
இந்த ஆண்டு மட்டும் 29 ஆயிரத்து 732 இலங்கைப் பணியாளர்கள் கொரியாவில் வேலைகேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
இதற்காக கடந்த 3 நாட்களில், இலங்கை முழுவதிலும் பல மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் சேகரிக்கப்பட்டன.
கடந்த வருடத்தை விட, இவ்வருடம் அதிகமானோர் கொரியாவில் பணியாற்ற விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கு கொரிய மொழித் தேர்வை வரும் அக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்டுள்ளது.
இந்தத் தேர்விலிருந்து 5000 பேர் தேர்வு செய்யப்பட்டு, கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் ஏப்ரல் மாதம் வரை கொரியாவில் பணியாற்றுவதற்காக இலங்கையிலிருந்து 3 ஆயிரத்து 500 பேர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
job: தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் வேலை வாய்ப்பு.. என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது












Click it and Unblock the Notifications