புத்தக வெளியீட்டு விழாவில் மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்
சென்னை: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள். அது போன்று என் வெற்றிக்கு பின்னால் என் மனைவி இருக்கிறார் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
எழுத்தாளர் ராணி மைந்தன் எழுதிய "எம்.பி.நிர்மல்-ஒரு தனி மரத்தோப்பு'' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகரில் நேற்று மாலை நடந்தது. இதற்கு எக்ஸ்னோரா இண்டர்நேஷனலின் தலைவர் சுலோச்சனா ராமசேஷன் வரவேற்புரை அளித்தார்.
இதில் கலந்து கொண்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட முதல் பிரதியை நடிகர் விவேக் பெற்றுக் கொண்டார்.
அப்போது துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
கடந்த 1989-ம் ஆண்டு எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் அமைப்பு அடையாறில் தொடங்கப்பட்டது. அப்போது எம்.எல்.ஏ.வாக இருந்த எனக்கு இந்த அமைப்பை தொடங்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த அமைப்பின் மூலமாக தான் நான் பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பையும் பெற்றேன். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார். அது போன்று என் வெற்றிக்கு பின்னால் என் மனைவி இருக்கிறார். நான் என் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஊக்கம் அளித்தவரும் என் மனைவி தான். இந்தப் புத்தகம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்று அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், எழுத்தாளர் சிவசங்கரி, ஷாசன் கெமிக்கல் எஸ்.அபயக்குமார், கே.ரெட்டி, ஆற்காடு இளவரசர் முகமது நவாப் அலி, பின்னணிப் பாடகி வாணி ஜெயராம், மேயர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
காமராஜரை டெல்லி வீட்டில் வைத்து கொளுத்த பார்த்தது சங்கி கூட்டம்! ஸ்டாலின் குற்றச்சாட்டு! -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில் -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
“படத்தில் விஜயகாந்துக்கு வாக்கு கேட்டேன்.. இன்று அவரது மகனுக்கு ஓட்டு கேட்கிறேன்" - ஸ்டாலின் பேச்சு -
"மும்மொழி கொள்கை வைத்து பிரச்சாரம் செய்யும் தைரியம் இருக்கா.?" பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் சவால் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு












Click it and Unblock the Notifications