26 டிஎம்சி காவிரி நீர்: தமிழகம் கோரிக்கை-கர்நாடகம் நிராகரிப்பு
டெல்லி: தமிழகம் கோரியபடி காவிரியில் உடனடியாக 26 டி.எம்.சி. நீரைத் தர கர்நாடகம் மறுத்துவிட்டது. இதையடுத்து பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையக் கூட்டத்தை உடனே கூட்டுமாறு தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவுப்படி தமிழகத்துக்கு இந்த ஆண்டு தர வேண்டிய காவிரி நீரை முழுவதுமாக கர்நாடகம் தரவில்லை.
இதையடுத்து இன்று டெல்லி நீர்வள அமைச்சகத்தில் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடந்தது. இதில் தமிழக அரசின் சார்பில் சுப்பிரமணியம், மோகன கிருஷ்ணன், ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில், பயிர்களைக் காக்கவும் குடிநீர் தேவைக்காகவும் உடனடியாக 26 டி.எம்.சி. நீரை காவிரியில் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகத்திடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது.
ஆனால், உடனடியாக நீரைத் திறந்துவிட முடியாது என்றும் மழையைப் பொறுத்தே நீரை வழங்க முடியும் என்றும் கர்நாடகம் தெரிவித்துவிட்டது.
இதை ஏற்க மறுத்துள்ள தமிழக அரசு இது குறி்த்து விவாதிக்க பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையத்தின் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications