ஒசாமா மருமகனின் சொத்துக்களை முடக்கியது அமெரிக்கா

ஒசாமா பின் லேடனின் மருமகன் அல் கயார். இவரது சொத்துக்களை முடக்க அமெரிக்க நீதித்துறை உத்தரவிட்டுள்ளது. இன்று இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அல் கொய்தா அமைப்புக்கு நிதி வழங்குவதில் அல் கயார் முக்கியப் புள்ளியாக இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது. இதையடுத்தே அவருக்கு அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சவூதி அரசு கடந்த ஆண்டு அதிகம் தேடப்படும் 85 பேரின் பட்டியலை வெளியிட்டது. அதில் கயாரும் ஒருவர். அமெரிக்காவுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல்களை நடத்த கயார் பெருமளவில் நிதி வசூல் செய்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் அல் கொய்தாவின் முக்கிய நிதியளிப்புப் புள்ளியாக உருவெடுத்தார் கயார். அந்த சமயத்தில் அல்கொய்தாவுக்கு பெருமளவில் நிதி வழங்கி வந்தவரான அல் கொய்தாவின் முன்னாள் தலைவரான முஸ்தபா அல் யாசித்தை பாகிஸ்தானில் வைத்து ஏவுகணைத் தாக்குதல் மூலம் அமெரிக்கா கொன்றது. இதையடுத்தே கயார் முக்கிய நிதிப் புள்ளியாக மாறினார் என்பது அமெரிக்காவின் கருத்து.
ஏற்கனவே கயாரின் சொத்துக்களை முடக்கி ஐ.நா.வும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications