தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா-சரத்குமார் அறிவிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் 18-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
இது குறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதை கருத்தில் கொண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 18-ம் தேதி தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் திடலில் நடைபெற உள்ளது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா, பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் கட்சித் தலைவர் சரத்குமார் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா தூத்துக்குடியில் நடைபெறுகிறது.
இந்த முப்பெரும் விழாவை முன்னிட்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
பெருந்தலைவரின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் மலரச் செய்ய இந்த முப்பெரும் விழாவில் சூளுரை ஏற்று புது வரலாறு படைத்திட, புது விடியல் உருவாக்கிட புயலென புறப்பட்டு வர வேண்டும் என்று அழைத்துள்ளார் சரத்.












Click it and Unblock the Notifications