மேற்கு வங்கம்: முக்கிய நக்ஸல் தலைவர் என்கெளண்டரில் சுட்டுக் கொலை

கடந்த மே மாதம் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலை மாவோயிஸ்டுகள் கவிழ்த்தனர். இதில் 148 பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாவோயிஸ்டுகளை மேற்கு வங்க போலீசார் அடையாளம் கண்டு அவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதையடுத்து 6 பேர் சரணடைந்தனர்.
இந் நிலையில் நக்ஸல் தலைவர்களான பப்பி மகதோ, அசித் மகதோ, சத்ரதார் மகதோ, உமா காந்த் மகதோ ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு, அவர்கள் பற்றி தகவல் கொடுப்பபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு தரப்படும் என்று சி.பி.ஐயும் அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கிடையே மேற்கு வங்க போலீசார் நடத்திய வேட்டையில் பப்பி மகதோ, சத்ரதார் மகதோ ஆகிய இருவரும் சிக்கினர். ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ப்பில் உமா காந்த் மகதோதான் முக்கிய நபராக செயல்பட்டார் என்று இந்த இருவரும் வாக்குமூலம் தந்தனர்.
இதையடுத்து உமா காந்த்தைப் பிடிக்க நடவடிக்கை தீவிரமானது. மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள லோதசுலி வனப்பகுதியில் மோகன்பூர் என்ற இடத்தில் அவர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை, அதிரடிப்படை போலீஸ் மற்றும் உள்ளூர் போலீஸ் படை கொண்ட கூட்டுப்படை வீரர்கள் குழு நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு உமாகாந்த் மகதோ இருந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.
இரவு 1 மணியளவில் உமாகாந்த் மகதோ மற்றும் அவருடன் இருந்த நக்ஸல்களுக்கும் கூட்டுப்படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.
அதிகாலை 5 மணிவரை நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் பல மாவோயிஸ்டுகள் குண்டு பாய்ந்து இறந்து கிடந்தனர். உமாகாந்த் மகதோவும் என்கெளண்டரில் பலியாகிவிட்டார்.
இதன்மூலம் ஞானேஸ்வரி ரயில் கவிழ்ப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களில் அசித் மகதோ என்பவர் மட்டுமே இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications