For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை- நெல்லையில் 3 புரோக்கர்கள் கைது

Google Oneindia Tamil News

நெல்லை: கூடுதல் விலைக்கு ரயில் டிக்கெட்களை விற்ற 3 புரோக்கர்களை நெல்லை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ரயிலில் எந்நாளும் பயணிகள் கூட்டம அலைமோதுகிறது. இதனால் இந்த வழிதட ரயில் டிக்கெட்டுகளை சிலர் கூடுதல் விலைக்கு கள்ள தனமாக விற்று வருகின்றனர். டிக்கெட் புரோக்கர்களின் ஆதிக்கத்தால் முன்பதிவு டிக்கெட் மையங்களில் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருப்பவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை.

அதோடு தக்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இடம் பிடிப்பதிலும் கடும் போட்டி நெல்லை, பாளை டிக்கெட் மையங்களில் நிலவுகிறது. இதை தடுக்க நெல்லை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் டிக்கெட் புரோக்கர்கள் சிக்கினாலும் அபராதம் செலுத்தி வி்ட்டு மீண்டும் டிக்கெட் விற்பனையில் களம் இறங்கி விடுகின்றனர். ரம்ஜான் பண்டிகையை ஓட்டி தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்தது.

இதற்கான முன்பதிவு நேற்று காலை துவங்கியது. இதனால் அனைத்து டிக்கெட் முன்பதிவு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை, பாளை முன்பதிவு மையங்களில் நேற்று இரவே சிலர் இடம் பிடித்தனர். வழக்கம்போல் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அவினேஷ் குமார், அன்சாரி மற்றும் ஏட்டு சார்லஸ் ஆகியோர் சோதனை நடத்தினர்.

அப்போது நெல்லை சந்தி்ப்பை சேர்ந்த கொமபையா, கொக்கிரகுளத்தை சேர்ந்த கிறிஸ்டோபர், கொங்கன்நாதன்துறையை சேர்ந்த முகமது காசிம் ஆகியோர் கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகளை கள்ள மார்க்கெட்டில் விற்பது தெரிய வந்தது.

அவர்களை போலீசார் கைது செய்து வரும் வரும் 29ம் தேதி நெல்லை எக்ஸ்பிரசி்ல் சென்னை செல்ல கூடிய டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X