அடுத்த வாரம் பெட்ரோல் மீண்டும் விலை 70 பைசா உயர்கிறது

Subscribe to Oneindia Tamil

Petrol Bunk
டெல்லி: அடுத்த வாரம் பெட்ரோல் மீண்டும் விலை 70 பைசா உயரவுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ள சமீபத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.50 வரை உயர்ந்தது. இந் நிலையில் மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசா வரை உயரும் என்று தெரிகிறது.

இது குறித்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் நிறுவனம் ஆகியவை ஆலோசனை நடத்தி விலை உயர்வை அறிவி்க்கவுள்ளன.

இப்போது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருவதால், அது முடியும் வரை இந்த நிறுவனங்களை காத்திருக்கச் சொல்லியுள்ளது மத்திய அரசு.

வரும் 31ம் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் விலை உயர்வை அறிவிக்கவுள்ளனர்.

கடந்த 15 நாள் சர்வதேச விலையை மட்டும் அளவில் கொண்டு விலையை உயர்த்தினால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 பைசா தான் உயர வேண்டும். ஆனால், கடந்த மாதம் முழுவதும் விலையை உயர்த்தாததால் (நாடாளுமன்றம் நடந்து வந்ததால்) ஒட்டுமொத்த சராசரியை கணக்கில் எடுத்தால் விலை 70 பைசா வரை உயரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+