விமான நிலையத்தில் விசா வழக்கும் முறை: ரத்து செய்கிறது இலங்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இந்தியர்கள் உள்ளிட்ட 70 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு, விமான நிலையத்தில் விசா வழக்கும் வசதியை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து இலங்கை குடியேற்றத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைக்கு வரும் வெளிநாட்டினருக்கு விமான நிலையத்திலேயே விசா வழங்கும் வசதி நிறுத்தப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி முதல் இந்த வசதி நிறுத்தப்படும்.

அதே நேரத்தில் சிங்கப்பூர் மற்றும் மாலத் தீவுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு மட்டுமே இனி இந்த வசதி தொடரும். அவர்களுக்கு மட்டுமே விமான நிலையத்திலேயே விசா வழங்கப்படும்.

இந்தியர்கள் உள்ளிட்ட 70 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கு இந்த வசதி இனி வழங்கப்படமாட்டாது.
அவர்கள் தங்கள் நாட்டில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலமோ அல்லது இலங்கை குடியேற்றத்துறையிடமோ விண்ணப்பித்து விசா பெற்றுத் தான் இலங்கைக்குள் வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே, 30 நாட்களுக்கு விசா வழங்கும் திட்டம், கடந்த 1970ம் ஆண்டு முதல் அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து மட்டும் 83,500 பேர் இலங்கைக்கு சுற்றுலா சென்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+