ரயில், பஸ் பயணத்திற்கு ஒரே பாஸ் அறிமுகப்படுத்த அரசு திட்டம்
சென்னை: பஸ் பயணம் மற்றும் ரயில் பயணத்திற்கு தனித் தனி பாஸ் வசதி இருப்பதற்குப் பதில் ஒரே பாஸை பயன்படுத்தும் வகையிலான திட்டம் குறித்து அரசு யோசித்து வருகிறது.
சென்னை நகரில் பஸ் பயணத்தைவிட ரயில் பயணம் மிகப் பிரபலமானது. காரணம், பஸ் சேவையை விட ரயில் சேவை மிகவும் வசதியாகவும், எளிதாகவும் இருப்பதால். இரண்டுமே சென்னை நகரின் முக்கிய போக்குவரத்து சேவையாக திகழ்கிறது.
மாநகர பேருந்துகளிலும், மின்சார ரயில்களிலும் பாஸ் வசதிகள் உள்ளன. இவற்றை தற்போது ஒன்றாக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
பஸ், மின்சார ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றிக்கு ஒரே பொதுவான பாஸ் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மசோதா வருகிற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது.
இதற்காக சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்,
பஸ் போக்குவரத்து, மின்சார ரயில் போக்குவரத்து, பறக்கும் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை என தனித்தனியாக செயல்படுகிறது. தனித்தனியாக இருப்பதால் இவற்றில் உள்ள சில வேலைகள் தாமதப்படுகின்றன. ஒரே அங்கீகாரம் அதிகாரத்தின் கீழ் இவற்றை கொண்டு வந்தால் எந்த பணியையும் விரைவாக செயல்படுத்த முடியும்.
அதற்காக சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் என்ற அமைப்பு தொடங்கப்படுகிறது.
இந்த அமைப்பை தொடங்க வரும் மழைக்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாவிற்கு வீட்டு வசதி, நிதித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ. உயர் அதிகாரிகள் இறுதி வடிவம் கொடுக்கிறார்கள். இந்த அமைப்பிற்கு என்னென்ன அதிகாரம் கொடுப்பது என்றும் ஆலோசிக்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications