மைக்கேல் ஜாக்சனின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது: மீண்டும் 'போஸ்ட் மார்ட்டம்'

உலகப்புகழ் பெற்ற பாப் மன்னன், நடனப் புயல் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து நடந்த விசாரணையில் அவரது குடும்ப டாக்டர் கான்ராட் முர்ரே கொடுத்த நச்சுதன்மை வாய்ந்த மருந்து மாத்திரைகளால் தான் அவர் மரணத்திற்கு காரணம் என்று தெரிய வந்தது.
எனவே போலீசார் டாக்டர் முர்ரே மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அதற்கு முன்பு, மைக்கேல் ஜாக்சனின் உடலைப் புதைக்கும் முன் 3 தடவை பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் மைக்கேல் ஜாக்சன் தான் புத்துணர்வுடன் நடனம் ஆடுவதற்காக மருந்து மாத்திரைகளை பயன்படுத்தியதாகவும், அதனால் தான் அவர் மரணம் அடைந்தததாகவும் வாதாடத் திட்டமிட்டுள்ளனர்.
எனவே புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை நடத்தவுள்ளனர்.
இந்த தகவல் அறிந்த மைக்கேல் ஜாக்சன் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications