தமிழ் சினிமா போல சம்பவம்-40வது மாடியில் இருந்து குதித்து உயிர் தப்பியவர்
நியூயார்க்: 40வது மாடியிலிருந்து குதித்து உயிர் தப்பியுள்ளார் 40 வயது அமெரிக்கர் ஒருவர்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் தாமஸ் மகில் (40). இவர் 40 அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்களால் மனமுடைந்தார். எனவே, உலக வாழக்கையை வெறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள தீர்மானித்தார்.
தற்கொலை செய்துகொள்ள தன் குடியிருப்பின் உச்சியைத் தேர்ந்தெடுத்தார். விரக்தியில் 40-வது மாடியில் இருந்து குதித்தார். அவர் இறக்க விரும்பினாலும், ஆண்டவன் விரும்பவில்லை போல. மாடியில் இருந்து குதித்த அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
குதித்தவர் தரையில் விழவில்லை. தமிழ் சினிமாக்களில் வருவது போல அங்கு நின்றுகொண்டிருந்த மேற்கூரை இல்லாத காரின் இருக்கையில் விழுந்தார். அதனால் தான் உயிர் போகவில்லை.
உயிர் பிழைத்தபோதிலும் அவ்வளவு உயரத்தில் இருந்து குதித்ததால் அவரின் கால் எலும்பு மட்டும் முறிந்து விட்டது. அதற்காக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications