சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கக் காசுகள் பறிமுதல் : கடத்தி வந்தவர் கைது

Subscribe to Oneindia Tamil

Gold Coins
சென்னை: விமான நிலையத்தில் ரூ. 1 கோடி பெறுமானமுள்ள தங்கக் காசுகளை கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியது. அதில பயணம் செய்தவர்களின் உடைமைகள் வழக்கம் போல் சோதனை செய்யப்பட்டது. அப்போது பதற்றத்துடன் நின்றுக் கொண்டிருந்த ஒருவரின் மீது அதிகாரிகளின் சந்தேகப் பார்வை பட்டது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது சரியான பதில் அளிக்கமுடியாமல் தினறினார்.

அவரின் இந்த செயலால் அதிகாரிகளின் சந்தேகம் ஊர்ஜிதமானது. அவர் அணிந்திருந்த மேல் அங்கி வழக்கத்திற்கு மாறாக பூடைத்திருந்தது. அதனை சோதனை செய்தபோது அதில் 8 கிராம், 10 கிராம் எடையுள்ள 500 தங்கக் காசுகள் இருந்தது.

அந்த காசுகளின் மதிப்பு ரூ. 1 கோடி. காசுகளைத் தந்திரமாகக் கடத்தி வந்தவரின் பெயர் செய்யது பாரூக் ( 44). அவர் காரைக்காலைச் சேர்ந்தவர். பாரீஸ் குடியுரிமை பெற்றிருக்கிறார்.

அவர் துபாயில் இருந்து புறப்படவில்லை. பாரீசில் இருந்து கிளம்பி துபாய் வழியாகச் சென்னை வந்துள்ளார். அவரிடம் இருந்த தங்கக் காசுகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். தங்கத்தை கடத்தி வந்தவர் அதை யாருக்காக செய்தார் என்பதை கண்டறிய விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+