நக்சலைட்களால் கடத்தப்பட்ட 3 போலீஸாரும் விடுவிக்கப்பட்டனரா? தெரியாது என்கிறார் நிதீஷ்குமார்
பாட்னா: பீகாரில் மாவோயிஸ்ட் நக்சலைட்களால் கடத்திச் செல்லப்பட்ட 3 போலீஸாரும் விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து தனக்கு எந்தத் தகவலும் இல்லை என்று முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
லக்கிசராய் பகுதியிலிருந்து ஆகஸ்ட் 29ம்தேதி மூன்று போலீஸாரும் மாவோயிஸ்ட் நக்சலைட்களால் கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரை நக்சலைட்கள் கொன்றதாக முதலில் தகவல் வந்தது. ஆனால் மூன்று பேரும் பத்திரமாக இருப்பதாக நேற்று நக்சலைட்கள் தரப்பிலிருந்து தகவல் வெளியானது.
மேலும், இன்று மூன்று பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இன்று மூன்று பேரும் விடுவிக்கப்பட்டதாக நக்சலைட்கள் தரப்பிலிருந்து செய்தி வந்துள்ளது. ஆனால் இதுவரை அவர்கள் யாரும் விடுவிக்கப்பட்டதாக தெரியவில்லை. இதுகுறித்து பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறுகையில், அதுகுறித்து எனக்கு இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
கிஷன்ஜி என்பவர் (மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் கிஷன்ஜியா என்பது தெரியவில்லை) இன்று அதிகாலையில், கடத்தப்பட்டுள்ள சப் இன்ஸ்பெக்டரான அபய் பிரசாத் யாதவின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து, யாதவ் விரைவில் வீடு திரும்புவார் என உறுதியளித்து விட்டுச் சென்றதாக உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்று செய்தி ஒளிபரப்பியுள்ளது.
அந்த சந்திப்பின்போது கிஷன்ஜியிடம் யாதவின் மனைவி ரஜினி பேசும்போது கிஷன்ஜி கையில் ராக்கி கயிறை கட்டினாராம். இதனால் மனம் நெகிழ்ந்த கிஷன்ஜி, நக்சலைட்களுக்கும் தாயார், சகோதரிகள் உண்டு. இனியும் உங்களைத் துயரத்தில் வைத்திருக்க விரும்பவில்லை. உங்களது குமுறலும், நெகிழ்ச்சியும் எங்களை இளக்கி விட்டது. விரைவில் உங்களது கணவர் வீடு திரும்புவார் என்று கூறியதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
இதனால் மூன்று பேரும் விடுவிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் பரவின. ஆனால் விடுவிக்கப்பட்ட 3 பேரும் இதுவரை வந்தது போலத் தெரியவில்லை. இதனால் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
இதுகுறித்து ஐஜி திவிவேதி கூறுகையில், நாங்களும் அந்த டிவி செய்தியைப் பார்த்தோம். ஆனால் வந்த நபர் மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் கிஷன்ஜியா என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.
யாதவ் தவிர சப் இன்ஸ்பெக்டர் ரூபேஷ் குமார், உதவி சப் இன்ஸ்பெக்டர் லோகஸ் டெடே, பீகார் ராணுவ போலீஸ் ஹவில்தார் இதேஷாம் கான் ஆகியோரும் கடத்தப்பட்டனர். இவர்களில் டெடே கொல்லப்பட்டு விட்டார். அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மூன்று பேருடன் சேர்த்து டெடே கடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications