தனித்தோ, கூட்டணி அமைத்தோ நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவோம்-சரத்குமார்
மதுரை: சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக மற்ற கட்சிகளைப் போல் பேரத்தில் ஈடுபடாமல் சமத்துவ மக்கள் கட்சி கொள்கை அளவில் தான் கூட்டணி அமைக்கும். எங்களுடன் எக்கட்சியும் கூட்டணி குறித்து பேசவில்லை. தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ நிச்சயம் வருகிற தேர்தலில் பேட்டியிடுவது உறுதி என்று கூறியுள்ளார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
அத்தனை கட்சிகளும் கூட்டணி குறித்து தீவிரமாக சிந்தித்துக் கொண்டும், பேசிக் கொண்டும், மிரட்டிக் கொண்டும் உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்பதை முதலில் தெளிவுபடுத்தியுள்ளார் சரத்குமார்.
இதுகுறித்து அவர் மதுரையில்,செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 4-ம் ஆண்டு விழாவும், பொதுக்கூட்டமும் வருகிற 18-ந் தேதி தூத்துக்குடியில் நடக்கிறது. அதற்காக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
4-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சமத்துவ மக்கள் கட்சி வலுப்பெற அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம். முக்கியமாக 234 தொகுதிகளிலும் மக்களுக்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், அவர்களின் தேவைகள் என்ன என்பது பற்றியும் ஒவ்வொரு வீடாக சென்று கருத்துக்கள் கேட்கப்படும்.
இதற்கான தீர்மானங்கள் தூத்துக்குடி கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்படும். மேலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்படும்.
சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி வைப்பதற்காக மற்ற கட்சிகளைப் போல் பேரத்தில் ஈடுபடாமல் சமத்துவ மக்கள் கட்சி கொள்கை அளவில் தான் கூட்டணி அமைக்கும். எங்களுடன் எக்கட்சியும் கூட்டணி குறித்து பேசவில்லை. தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ வருகிற தேர்லில் பேட்டியிடுவது உறுதி என்றார் அவர்.












Click it and Unblock the Notifications