பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை கைது : கேரளாவில் நடந்த அவலம்
திருவனந்தபுரம்: கேரளாவில் பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அருகே உள்ள மலையன் கீழ் பகுதியைச் சேர்ந்தவர் ரகு. இவருடைய 13 வயது மகள் அடிக்கடி வாந்தி எடுத்து வந்தாள். இதனால் ரகுவின் மனைவி சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர் அவள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.
இந்த செய்தியைக் கேட்ட தாய் அதிர்ச்சியில் உரைந்தார். பின்னர் தன் மகளிடம் கர்ப்பத்தைப் பற்றி விசாரித்தார். ஏற்கனவே, தன் மகள் கர்ப்பமாக இருப்பதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. தன் கர்ப்பத்திற்கு காரணம் தன்னுடைய தந்தை தான் என்று சிறுமி கூறியதைக் கேட்ட அவர் செய்வதறியாது திகைத்தார்.
இதையடுத்து காட்டாக்கடை போலீசில் தாயும் மகளும் புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரகுவை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications