நாளை நாடு முழுவதும் 5 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் முடங்கும்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது, வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, தாராளமயமான கொள்கைகள் கூடாது, வங்கி நிரந்தர பணிகளை ஒப்பந்த முறையில் நியமிகக் கூடாது போன்ற கோரிக்கைககளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது.
பொதுத்துறை வங்கிகள், பழம்பெரும் தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகளை சேர்ந்த 5 லட்சம் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்கும் இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 40,000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், ஸ்டேட் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். அதே போல புதிய தனியார் வங்கிகளும் போராட்டத்தில் ஈடுபடப் போவதி்ல்லை.
வேலை நிறுத்தம் நடப்பதால் பண பட்டுவாடா, காசோலை பறிமாற்றம் ஆகிய பணிகள் பாதிக்கக்கபடவுள்ளன. இதனால் ஏ.டி.எம். மையங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications