கிருஷ்ணகிரியில் முகாமிட்டிருக்கும் 20 பேர் கொண்ட பீகார் கொள்ளைக் கும்பல்: 4 பேர் சிக்கினர்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பீகாரைச் சேர்ந்த ஒரு கொள்ளைக் கூட்ட கும்பலே முகாமிட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை தாலுக்காவில் பீகாரைச் சேர்ந்த 20 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் முகாம் இட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஊத்தங்கரை, போச்சம்பள்ளி தாலுக்காக்களில் கடந்த சில மாதங்களில் மட்டும் ஏராளமான வழிப்பறிச் சம்பவங்கள் நடந்துள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற பயப்படுகின்றனர். கடந்த வாரம் தெருவில் நடந்துவந்த ஆசிரியர் ஒருவரி்ன் தங்கச் செயின் பறிபோனது.

இத்தனை நடந்தும் கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் முயற்சி மேற்கொள்ளவில்லை.

இதற்கிடையே வேலூர் மாவட்டத்திலும் வழிப்பறி நடந்துள்ளது. உடனே ஜோலார்பேட்டை காவலர்கள் கொள்ளையர்களை சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் பீகார் மாநிலத்தில் இருந்து வந்து ஊத்தங்கரையில் தங்கியிருப்பது தெரியவந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இன்று காலை ஊத்தங்கரை சென்ற போலீசார் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான இருவரை கைது செய்தனர்.

20 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலில் 4 பேர் மட்டுமே சிக்கியுள்ளனர். மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+