Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணா பல்கலைக்கழகம்-செல்போனில் பேசிய 2 பொறியியல் மாணவர்கள் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில், தடையை மீறிசெல்போனைப் பயன்படுத்திய 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில்வகுப்பு நேரத்தில் செல்போன்களைப் பயன்படுத்த மாணவ, மாணவியருக்கு தடை விதிக்கபப்ட்டுள்ளது. இதைக் கண்காணிக்க தீவிர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த 28-ந்தேதி இயற்பியல் வகுப்பில் செல்போன் பயன்படுத்தியபோது பிடிபட்டார்.

இதையடுத்து கடந்த 30-ந்தேதி முதல் ஒரு வாரம் அந்த மாணவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதேபோல 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த 2-ந்தேதி கணித வகுப்பில் செல்போன் பயன்படுத்தியபோது பிடிபட்டார். அவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட பிறகு மாணவர்கள் மீது இப்போதுதான் முதல் முறையாக நடவடிக்கை எடுத்துள்ளனர். அதுவும் ராகிங் காரணமாக மாணவி ஜோதி தற்கொலை செய்து கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளதன் பின்னணியில் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+