துணைவேந்தர், மனைவி, உதவியாளர் படுகொலை-கொலையாளிக்கு தூக்கு-5 ஆயுள்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: நாகர்கோவிலில் கடந்த 2007ம் ஆண்டு கோழிக்கோடு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மாலிக் முகம்மது, அவரது மனைவி மற்றும் உதவியாளர் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது நாகர்கோவில் கோர்ட். அது போக 5 ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மாலிக் முகமது. 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் மாலிக் முகமது, உதவியாளர் ஞானப்பிரகாசம் நாகர்கோவிலில் கொலை செய்யப்பட்டனர்.

மேலும் மாலிக் முகமது மனைவியை கடத்திச் சென்று கொன்று திண்டிவனம் அருகே உடல் வீசப்பட்டிருந்தது.

மூவரையும் கொன்றதாக அன்பரசு, கோபி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த அன்பரசு தப்பிய நிலையில் கோபி மீதான குற்றச்சாட்டை விசாரித்து 101 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் அன்பரசு பிடிபட்டார். அவர் மீதான குற்றச்சாட்டை விசாரித்த்த நாகர்கோவில் கோர்ட், அவருக்கு தூக்கு தண்டனை மற்றும் 5 ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+