பிற்படுத்தப்பட்டோர் சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை வழங்கும் சலுகைகளைப் பெற ஆண்டு வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
கிராமப் புறங்களில் ரூ. 16,000 என்பது ரூ. 40,000 ஆகவும் , நகர்ப் புறங்களில் ரூ. 24,000 என்பது ரூ. 60,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள உத்தரவி்ல்,
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இலவச வீட்டு மனைகள், தையல் எயந்திரங்கள், சலவைப் பெட்டிகள் போன்றவற்றை வழங்கும் திட்டங்களின் கீழ் பயனாளிகள் பயன்பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ. 12,000 ஆக இருந்தது. 2000ம் ஆண்டில் இந்தத் தொகை கிராமப் புறங்களில் ரூ.16,000 ஆகவும் நகர்ப் புறங்களில் ரூ. 24,000 ஆகவும் உயர்த்தப்பட்டது.
அதன்படி, பயனாளிகளுக்கு வீட்டு மனைகளும், தையல் எந்திரங்களும், சலவைப் பெட்டிகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின்கீழ், அதிக எண்ணிக்கையில் பயனாளிகள் பயன்பெறும் வகையில், வருமான உச்சவரம்பை மேலும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு இலவசமாக வழங்கி வரும் வீட்டு மனைகள், தையல் எந்திரங்கள், சலவைப் பெட்டிகள் ஆகியவற்றைப் பெறுவதற்குப் பயனாளிகளின் ஆண்டு வருமானம் கிராமப் புறங்களில் இப்போதுள்ள ரூ.16,000 என்பது ரூ. 40,000 ஆகவும், நகர்ப் புறங்களில் இப்போதுள்ள ரூ. 24,000 என்பது ரூ. 60,000 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
இலவச தையல் எந்திரம், சலவைப் பெட்டிகள் மற்றும் இலவச வீட்டு மனைப் பட்டாக்களைப் பெற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் மாவட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
தையல் எயந்திரம் பெற வேண்டுமெனில், தையல் கலை தெரிந்திருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சலவைத் தொழிலாளர்களுக்கு மட்டுமே சலவைப் பெட்டிகள் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வீடோ அல்லது வீட்டு மனையோ வைத்திருக்காத பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது.
சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 20% கூலி உயர்வு:
இந் நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் 33,750 பேருக்கு 20 சதவீத கூலி உயர்வும், விடுமுறை நாட்களுக்கு ஊதியமும் அறிவித்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு டன் ஒன்றுக்கு கையாளுதல் கூலியாக ரூ.17.95 வழங்கப்படும்.
மேலும் ஆண்டு ஒன்றுக்கு 10 விடுமுறை நாட்களுக்கு ஊதியமும் வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.8.32 கோடி கூடுதலாக செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications