ஜெ.வுக்கு மிரட்டல்-குஷ்பு பேச்சு: கோட்டை முன்பு போராடிய அதிமுக பெண் பிரமுகர்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களைக் கண்டித்தும், ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசிய நடிகை குஷ்புவைக் கண்டித்தும், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முன்பு உண்ணாவிரதப் போராட்டத்த தொடங்கிய அதிமுக பெண் பிரமுகரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளராக இருப்பவர் புவனேஸ்வரி. இவர், நேற்று பகல் 11.30 மணியளவில் சென்னை கோட்டை கொத்தளம் முன்பாக மெயின் ரோட்டில் திடீரென்று கொளுத்தும் வெயிலில் உட்கார்ந்தார். சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அவர் தெரிவித்தார்.
உடனடியாக அங்கு காவல் பணியில் இருந்த உதவி கமிஷனர் காதர்மொய்தீன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் போலீஸ் படையோடு சென்று புவனேஸ்வரியை கைது செய்தனர். பின்னர் புவனேஸ்வரி கோட்டை போலீஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டார்.
அவர் சில துண்டுப் பிரசுரங்களை வைத்திருந்தார். அதில்,ஜெயலலிதாவுக்கு அடிக்கடி மிரட்டல் கடிதங்கள் வந்தவண்ணம் உள்ளது. மீண்டும் இப்போது ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இவ்வாறு மிரட்டல் கடிதங்கள் அனுப்பும் நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு போலீஸ் படை ஒன்றை அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கையும், பெண்களின் பாதுகாப்பையும் நிலைநிறுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்கவேண்டும்.
அ.தி.மு.க. தொண்டர்களாகிய நாங்கள் அனைவரும் உயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளோம். கொலை மிரட்டல் விடுத்தவர்களை உடனே கைது செய்ய வேண்டி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினேன் என்று கூறப்பட்டிருந்தது.
பின்னர் நேற்று மாலை புவனேஸ்வரியை போலீஸார் விடுவித்து அனுப்பி வைத்தனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications