For Daily Alerts
Just In
உர மானியத்தை வெகுவாக குறைக்க யோசனை-ரங்கராஜன்
ஹைதராபாத்: உரங்கள் மீதான மானியத்தை படிப்படியாக கணிசமாக குறைப்பது குறித்து யோசிக்கப்பட்டு வருவதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் தலைவரான சி.ரங்கராஜன் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், உர மானியங்கள் குறித்து அரசு தீவிரமாக யோசித்து வருகிறது. அவற்றை வெகுவாக குறைக்க வேண்டியது அவசியமாகும். இதை நாம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
விவசாயிகளுக்கு குறிப்பிட்ட அளவுக்கான உரத்திற்கு மானியம்அளித்து விட்டு, மிச்சத்தை அவர்கள் சந்தை விலைக்கு பெறச் செய்யலாம் என்பது ஒரு யோசனை.
எரிபொருட்கள் மீதான மானியத்தை நீக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேசமயம், உணவுப் பொருள் தொடர்பானவற்றின் மீதான மானியத்தை நீக்கினார் ஏழை மக்கள் பாதிக்கப்படுவர் என்பதால் அதில் கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது என்றார்.
Story first published: Saturday, September 11, 2010, 13:47 [IST]