இந்தியாவில் மீண்டும் சான்யோவை அறிமுகப்படுத்தும் பானாசோனிக்
கொல்கத்தா: புகழ் பெற்ற சான்யோ பிராண்ட் தயாரிப்புகளை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது பானாசோனிக் நிறுவனம்.
ஜப்பானின் புகழ் பெற்ற நுகர்வோர் பிராண்ட் சான்யோ. இதன் தயாரிப்புகள் தற்போது புழக்கத்தில் இல்லை. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் சான்யோ பிராண்ட் தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த பானாசோனிக் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பானாசோனிக் இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் இயக்குநர் மனீஷ் சர்மா கூறுகையில், இந்தியாவின் 2ம் நிலை மற்றும் 3ம் நிலை நகரங்களில் இவற்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதேசமயம், மெட்ரோ மற்றும் பெரிய நகரங்களிலும் இதை விரிவபுடுத்துவோம்.
சான்யோ பிராண்டுகள் அனைத்தையும் 9 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளோம்.
சவுன்ட் சிஸ்டம், எல்சிடி, ரெப்ரிஜிரேட்டர்கள், வாஷிங் மெஷின் ஆகியவற்றை சான்யோ பெயரில் வெளியிடவுள்ளோம் என்றார் அவர்.